டாஸ்மாக் சந்து கடைகளை மூடுங்க! இல்லனா இது தான் நடக்கும்! எச்சரிப்பது யார் தெரியுமா?

Published : Jan 02, 2025, 07:44 PM ISTUpdated : Jan 02, 2025, 07:58 PM IST

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் கீழ் இயங்கும் சட்டவிரோத சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையெனில், பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
15
டாஸ்மாக் சந்து கடைகளை மூடுங்க! இல்லனா இது தான் நடக்கும்! எச்சரிப்பது யார் தெரியுமா?
TASMAC

தமிழகத்தில் டாஸ்மாக் கடை அரசு எடுத்து நடத்தி வருகிறது. மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால்,  டாஸ்மாக் கடைகளின் கீழும் 4 முதல் 5 சந்து கடைகள் செயல்படுவதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் மாமூல் தரப்படுவதாக ராமதாஸ் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

25
TASMAC Shop

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமான டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 4829 என்று கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் கீழும் 4 முதல் 5 சந்து கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகளில் 24 மணி நேரமும் மது வணிகம் நடைபெறும். இந்தக் கடைகள் சட்டவிரோதமானவை. அவை எங்கெங்கு உள்ளன, அவற்றை நடத்துபவர்கள் யார்? என்ற விவரங்கள் அனைத்தும் காவல்துறைக்கு நன்றாகத் தெரியும். 

இதையும் படிங்க: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை!

35
Tasmac illegal shops

இந்தக் கடைகளை மூடுவதுடன், அவற்றை நடத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்வதில்லை. அதற்குக் காரணம், அந்தப் பகுதியைச் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் மாமூல் தரப்படுவது தான்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் விடுமுறை! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் லீவு?

45
Ramadoss

சந்து கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மது குடிக்க வேண்டும் என்றால், அதிக தூரம் செல்லத் தேவையில்லை, கைக்கெட்டிய தொலைவில் மது கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதனால் தான் மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மதுவுக்கு அடிமையாகின்றனர். 

இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!

55
tamilnadu government

இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்து மதுக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த சந்துக் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories