சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும். இந்நிலையில் பெண்களுக்காக அரசு பல்வேறு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன், கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.