அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றை நடத்த கடன் பெற முடியும். மேலும் பயனாளி, சிறுபான்மை சுய உதவிக் குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
குழுவில் குறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். 60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர, ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பினர் இடம் பெறலாம்.
குழுவில் அதிகபட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்சமாக 10 அங்கத்தினர்கள் இருத்தல் வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.