ரூபாய் 1.50 லட்சம் நிதி உதவி.! அடித்தது ஜாக்பாட்- உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

First Published Oct 13, 2024, 10:33 AM IST

தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நிதி உதவி திட்டமும் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 1.50 லட்சம் ரூபாய் நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துளது.

தமிழக அரிசின் நிதி உதவி திட்டம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மக்களுக்கு நிதியாக உதவி செய்திடவும் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை மாதாந்திர நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

அடுத்ததாக ஏழை எளிய பெண்களுக்கு திருமணத்திற்கு உதவிடும் வகையில் 25ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை நிதி உதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மேலும் சுய தொழில் தொடங்க உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

magalir urimai thogai

நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி தொகை

மேலும் குடும்பத்தலைவிகள் தங்களது சிறிய தேவைகளுக்கும் யாரையும் நம்பி இருக்க கூடாது என்பதற்காக மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படுகிறது. மேலும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதாந்திர செலவில் சேமிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கணவனை இழந்த பெண்களுக்கு உதவி தொகை திட்டம், முதியோர்களுக்கான உதவித்தொகை திட்டமும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு தமிழ்க் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் நாட்டுப் புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புற கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள்  பயணம் செய்யும்போது 50 சதவிகித பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  

Latest Videos


நாடக கலைஞர்களுக்கு உதவி தொகை

மேலும் தமிழக கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட உதவிடும் வகையில்  நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாயானது  500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது.   இந்தநிலையில் அடுத்ததாக புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்க் கலைகள், இலக்கியம், பண்பாடு சார்ந்த ஐந்து நாட்டிய நாடகங்கள் மற்றும் வரலாறு, புராணம், சமூகக் கருத்துக்கள் அடங்கிய ஐந்து மேடை நாடகங்கள் உருவாக்கி அரங்கேற்றிட தலா ரூ.1.50 இலட்சம் வீதம் ரூ. 15 இலட்சம் ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட கலைஞர்கள், கலைக்குழுக்கள் மற்றும் கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்ப படிவத்தினை மன்றத்தில் இலவசமாக நேரிலோ அல்லது தபாலிலோ (சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பி) பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்து 25.10.2024-க்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

முகவரி

உறுப்பினர்-செயலாளர்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,

31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, - 600 028

தொடர்பு எண் : 044-2493 7471

10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வேண்டுமா.! தமிழக அரசின் சூப்பர் திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

click me!