எந்த சூழலிலும் தமிழகத்தில் போதை கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது. படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனிடையே விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக வெளியாகும் தகவல், லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு துயரத்தை தரக்கூடிய, அவர்களின் சேமிப்பை குறைக்கக் கூடிய வழியாகும். குறிப்பாக தீபாவளி போனஸ் சமயத்தில் கிடைக்கும் பெருந்தொகையால் ஏழை, நடுத்தர குடும்பங்களில் தங்களின் குடும்பத்திற்கு தேவையான திருமணத்திற்கு காத்திருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான பொருட்களை வாங்கும் நேரத்தில் அந்தப் பணத்தை கொள்ளையடிக் திட்டமிடுவது கொடுங்கோல் அரசாங்கம் நடத்துவதற்கு சமமானது.