சென்னை மக்களே போட் ரெடியா இருக்கட்டும்; அக்டோபர் 15,16,17 - வெதர் மேன் தந்த அலர்ட்!

First Published Oct 12, 2024, 10:17 PM IST

Chennai Rain : சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெதர் மேன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Chennai Rain

இந்த ஆண்டு தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று முன்னதாகவே துவங்குகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. பொதுவாக அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தான் வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தை நோக்கி நகரும். ஆனால் இந்த முறை 15 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது வருகின்ற அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

School Girls: மாணவிகள் பென்சில், பேனாவை வைத்து தற்காப்பது எப்படி? சூப்பர் பிளானோடு களமிறங்கும் தமிழக அரசு

Chennai Weather Update

தென் தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் இடையே வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியானது தற்பொழுது நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை அளித்திருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகின்ற திங்கள்கிழமை முதல் அனேக இடங்களில் கன மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த கனமழை காரணமாக சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Weather man

இந்த சூழலில் இந்திய வெதர்மேன் சஞ்சய் வெளியிட்டுள்ள சில தகவல்களின்படி காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று சென்னையில் நெருங்கி வருவதாகவும். அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சென்னை மக்கள் படகுகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார் அவர். தமிழகத்தின் அநேக இடங்களில் அக்டோபர் 15ம் தேதி துவங்கி கனமழை [பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

udhayanidhi

மேலும் இந்த வருட பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். கூடுதல் அளவிலான படகுகள், தண்ணீர் தேங்குகின்ற இடத்தில் அவற்றை அகற்ற மோட்டார்கள் என்று அனைத்தையும் தேவையான அளவில் கையிருப்பு வைத்துக்கொள்ள உரிய அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அதிகாரிகள், மக்களோடு whatsapp குழுக்கள் மூலம் இணைந்து செயல்படும் அழைப்பு விடுத்துள்ளார்.

Tamilnadu Heavy Rain: மக்களே உஷார்! இந்த 8 மாவட்டங்களில் ஏடாகூடமாக மழை பெய்யப்போகுதாம்!

click me!