மாணவர்களுக்கான போட்டிகள்
மாணவ,மாணவிகளுக்கு களிமண் பொம்மைகள் செய்தல், மணல் சிற்பம், பலகுரல் பேச்சு, மாறு வேட போட்டி, நாட்டுப் புறப்பாடல், நகைச்சுவை, கதை சொல்லுதல், சிலம்பம் சுற்றுதல்பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, மாறு வேட போட்டி, நாட்டுப் புறப்பாடல், பரதநாட்டியம், நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் கடந்த ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.இதன் அடுத்தக்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறுவள மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுவள மையப் போட்டிகள் 17,10,24 முதல் நடத்தப்பட்டு, 22,10,24 முதல் 24,10,24 வரை வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.