குறிப்பாக சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியில் ஒரு சதுர அடி 10,000 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பகுதிகளிலேயே ஒரு சதுர அடி 3000 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எப்படியாவது சொந்த இடம் வாங்கி வீடு கட்டி விட வேண்டும் என்பது பொதுமக்களின் கனவாக இருந்து வருகிறது.