குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை பவுர்ணமி தினத்தில் குவிந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அவரின் அருளை பெற்று செல்கின்றனர். மன குறையுடன் வந்து கிரிவலம் செல்பவர்களின் குறையை நிவர்த்தி செய்வதால் திரும்ப திரும்ப அண்ணாமலையாரை தரிசித்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கிரிவலம் செல்பவர்களின் பசியை போக்கும் வகையில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க என்னிட்ட அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.
இதையும் படிங்க: Tiruvannamalai Girivalam Ashtalingam: தி-மலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம்! அள்ளி கொடுக்கும் பலன்கள்!