கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பில், மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றைப் பயிரிடும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 01.04.2024 க்குப்பிறகு ஏற்றுமதி குறித்தான சான்றிதழ்களான இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு (IE Code), பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (Registration membership Certificate, டிஜிட்டல் கையொப்பம் FSSAI மத்திய உரிமம், போன்றவற்றிற்கான ரசீது சமர்ப்பித்தால், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி
ஆணையம் (APEDA) போன்ற ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் ரூ.15000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.