தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடு
தமிழகத்தில் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மூலம் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைக்கு ஏற்பாடு செய்ய வேலை வாய்ப்பு முகாமையும் நடத்தி வருகிறது.
இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பிரபல தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்தில் தொழிற்சாலையிலும் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலங்களில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.