நவ திருப்பதிக்கு 500 ரூபாய் கட்டணம்
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், இரட்டை திருப்பதி, பெருங்குளம், ஆழ்வார் திருநகரி, தென் திருப்பேரை, நத்தம், திருப்பூளியங்குடி, திருக்கோளூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தானது புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி 28ஆம் தேதி மற்றும் அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய நான்கு தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவ திருப்பதி சுற்றுலாவிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலம் ஏற்பாடுகளை செய்துள்ளது. நவ திருப்பதிக்கு இயக்கப்படுகின்ற சிறப்பு பேருந்துகள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.