கறவை மாடுகள் வளர்க்க நிதி உதவி
தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாடு கழக லிமிடெட் சார்பாக கறவை மாடு வாங்குவதற்கு கடன் உதவி திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மூலம் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் பயனாளிகளை தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.