இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாலதான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள். உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால், வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களை குழப்ப நினைக்குறாங்க.
அதுக்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால்தான், நம் சாதனைகளை எல்லாம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்
நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். அந்த பயனாளிகள் எல்லோரையும், இனிமேல் நம்மோட வாக்காளர்களாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் உள்ளது. நல்லா கேட்டுக்குங்க... தேர்தல் நெருங்கிடுச்சு.
இனி நம் சிந்தனை செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். இங்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லாரும் இருக்கீங்க. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். "தேர்தல் வருது நடவடிக்கை எடுக்கமாட்டார்"-னு மட்டும் நினைக்காதீங்க. தனிநபர்களை விட கட்சிதான் பெரிது.