அதேபோல வண்டி எண் 06009, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்படும். இந்த வண்டி மதுரைக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடையும். அதேபோல அதே வண்டி 06100 என்ற எண்ணில் நவம்பர் மூன்றாம் தேதி மாலை மதுரையில் இருந்து சுமார் 7:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் விடியற்காலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகின்றது. இந்த வண்டியில் 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக செயல்படும். இந்த முறை அதிக அளவில் தீபாவளி திருநாள் விடுமுறை வந்த நிலையில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் மீண்டும் சென்னை நோக்கி வர உள்ள நிலையில், இந்த இரண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
தொடர்ச்சியாக இது எத்தனை நாளைக்கு இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
Broadway Bus Stand Change: இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! எந்த இடம் தெரியுமா? வெளியான தகவல்!