இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இடம் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தை இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.