தமிழக அரசியல் களம் இப்போது திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஒரு பகுதியில் நின்றுகொண்டே, அதே திமுகவின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அறிக்கை, அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சித் திட்டங்களும்... அரசியல் அஸ்திரங்களும்!
நாளை திருச்சிக்கு வரவுள்ள பிரதமர் மோடி, வெறும் அரசியல் மேடைக்காக மட்டும் வரவில்லை. மாறாக, பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களோடு களம் இறங்குகிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள். சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பு மேம்பாடுகள். முக்கியமாக, கிராமப்புற வளர்ச்சிக்காக 89 ஊரக சாலைத் திட்டங்கள். இந்த வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி, "நாங்கள் சொல்வதைச் செய்கிறோம்" என்ற பிம்பத்தை தமிழக மக்கள் மத்தியில் விதைக்க மோடி திட்டமிட்டுள்ளார்.