கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூரின் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற அக்கட்சியின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10,000 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட அந்த இடத்தில், சுமார் 30,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், விஜய் வருகையில் ஏற்பட்ட தாமதமே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம் என்றும் புகார்கள் எழுந்தன. தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.