கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகாவலசை கிராமத்தில் கண்ணப்பன்(75). விவசாயி. இவரது மனைவி சென்னம்மாள் (70). இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே கண்ணப்பன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ப நபர் நிர்வாணத்துடன் வந்துள்ளார். வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கண்ணப்பனை மர்ம நபர் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.