Published : May 13, 2026, 12:48 PM ISTUpdated : May 13, 2026, 01:01 PM IST
EPS Vs SP Velumani: தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவளித்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் பேசிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தற்போது அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன். அப்படிப்பட்ட நிலையில், கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். எல்லா கட்சிகளிலும் இது உண்டு. ஆனால், அந்தச் சூழ்நிலையில் ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயமானது என்பது எனக்கு புரியவில்லை. எங்கள் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காது என்றும் சிலர் பதவி ஆசையில் செயல்படுவதாகவும் விமர்சித்திருந்தார்.
25
எஸ்.பி.வேலுமணியை பேச எதிர்ப்பு
இதனையடுத்து அதிமுகவின் மற்றொரு தரப்பான எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் பேச தொடங்கிய போது இபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், யாரை பேச அனுமதிப்பது என்பது தன்னுடைய உரிமை என்று கூறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன், எஸ்.பி.வேலுமணியை பேச அனுமதித்தார்.
35
வேலுமணி தரப்பு விஜய்க்கு ஆதரவு
அப்போது அதிமுக விஜய்க்கு ஆதரவளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று மாற்றியிருக்கிறார். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி. மக்கள் தீர்ப்பளித்து, முதலமைச்சருக்கு வாக்களித்துள்ளார்கள். அதற்கு அதிமுக சார்பாக ஆதரவளிக்கிறோம். அதேபோல நாங்கள் யாரும் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் கிடையாது. எனவே முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது தவெக அரசு வேண்டும் என 144 உறுப்பினர் ஆதரவு அளித்துள்ளனர். அதில், அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இபிஎஸ் தரப்பு அதிமுக அரசுக்கு எதிராக 22 பேர் வாக்களித்தனர்.
55
பதவி பறிபோகுமா?
அதிமுகவின் கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அதிமுக எச்சரித்திருந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் 25 பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆகையால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும்.