ஜூலை 11, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 22, செப்டம்பர் 5, செப்டம்பர் 14, செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 10 ஆகிய நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். அனைத்து பள்ளி நிர்வாகங்களும் இந்த உத்தரவை கட்டாயமாக பின்பற்றி, மாணவர்களுக்கு முழுமையான கற்றல் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.