பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து கல்லூரியில் வகுப்புகளும் தொடங்கப்டவுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும். அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும்.