பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தொடக்கத்தில் அதன் வாங்கும் விலையானது சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால், மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது.