School Teachers: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஆசிரியர்கள்.! ஒரே நாளில் சொந்த ஊருக்கு பணியிடமாற்றம்! வெளியான சூப்பர் தகவல்

Published : Jun 14, 2026, 07:46 AM IST

TN Government Teachers Transfers: தமிழகத்தில் அரசு பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன.

PREV
15

ஆசிரியர்கள் தான் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். எனவே ஆசிரியர்கள் இல்லையென்றால் மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. எனவே மாணவர்கள் நல்ல நிலைக்கு செல்ல ஆசிரியர்களின் கண்டிப்பு, வாழ்க்கைக்கு ஏற்ற பாடங்கள் தான் முக்கியமானது. எனவே தமிழகத்தில் அரசு பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன.

25

தற்போது வரை தமிழகத்தில் சுமார் 36,000 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு பணியிடம் மாறுதல் தொடர்பாக பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும். அந்த வகையில் அந்த வகையில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

35

இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வி ஆதிதிராவிடர் நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

45

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளி /நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 16,17,18ம் ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

55

பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories