வெள்ள பாதிப்பு: தமிழக அரசு கொடுக்கும் ரூ.2,000! டோக்கன் எப்போது?

Published : Dec 05, 2024, 01:00 PM ISTUpdated : Dec 05, 2024, 02:40 PM IST

Tamilnadu Flood Relief Token Distribution: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

PREV
15
வெள்ள பாதிப்பு: தமிழக அரசு கொடுக்கும் ரூ.2,000! டோக்கன் எப்போது?
Fengal Cyclone

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வடமாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது.  திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. 

25
Villupuram Heavy Rain

இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், விளை நிலங்கள் நாசமாகின. மேலும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: TASMAC Shop: டாஸ்டாக் கடைகளில் சூப்பர் திட்டம்!! அரசே ரூ.10 கொடுக்கிறது! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

35
CM Stalin

அதி கனமழையின் காரணமாக கடுமையான பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த நிவாரண தொகை எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதையும் படிங்க:  School Holiday: வரும் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

45
Tamil Nadu Relief Amount

அது போல் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி  இறந்திருந்தால் தலா ரூ 100 வழங்கப்படும். மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ 37,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

55
Amudha IAS

இந்நிலையில் நிவாரண தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.2,000 பெற இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த வருவாய்துறை செயலாளர் அமுதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories