தனி நபர் முதல் சிறு, குறு நிறுவன கடன் உதவி
நபர் ஒருவருக்கு 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சிறு வணிக வியாபாரிகள் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அடுத்ததாக சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு, உற்பத்தி நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியான 7 சதவீத விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்திற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.