Tasmac : இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கண்டிப்பா கிடைக்கும்! உங்க பேங்க் அக்கவுண்டுக்கே வந்து சேரும் தொகை!

Published : Jun 16, 2026, 11:53 AM IST

Tasmac : தமிழகத்தில் மதுக்கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப்பெறுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தற்போது புதிய முயற்சியாக காலி மது பாட்டில்களைத் தானாகவே பெற்றுக்கொள்ளும் தானியங்கி இயந்திரங்களைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
12
இயந்திரம் செயல்படும் விதம்

இந்தத் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்த இரண்டு முக்கிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

1. கைப்பேசி எண் மற்றும் OTP முறை: இயந்திரத்தில் தங்களது கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளீடு செய்ய வேண்டும். பின், காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, இயந்திரத்தில் பாட்டிலைச் செலுத்தினால், அதற்கான ரூ.10 தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2. UPI செயலி முறை: பயனாளர்கள் தங்களது UPI செயலி மூலம் இயந்திரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பிறகு பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து இயந்திரத்தில் செலுத்த வேண்டும். சரிபார்க்கப்பட்டதும், அதற்கான பணம் வங்கிக் கணக்கில் சேரும்.

இதையும் படிங்க : No Alcohol Village : இந்த ஊர்ல 26 வருஷமா யாரும் சரக்கு அடிக்கிறதில்ல! ஏன் தெரியுமா?

22
சோதனை முயற்சி

முதற்கட்டமாக, சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் இந்த இயந்திரம் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது, பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : "டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!

Read more Photos on
click me!

Recommended Stories