அரசுக்கு எதிராக கட்டுரைகள்
மேலும் இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர் இதற்காக புத்தக வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் அல்லது வெகுமதி பெறும்போது உடனடியாக அரசால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில் இந்த விதியில் தற்போது புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அரசு ஊழியர்கள் எழுதும் புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமோ அல்லது தாக்குதலோ செய்யப்படவில்லை என உறுதி அளிக்க வேண்டும்.