ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை
இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவுபிறப்பித்துள்ளது.
அந்த வகையில் பேருந்து இயக்கம் தொடர்பாக கண்காணிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, பேருந்து பணிமனைகளில் தினசரி இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart - தயார் செய்து ஓட்டுனர் நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.