சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! எந்தெந்த இடங்கள்? எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!

Published : Sep 10, 2025, 07:08 PM IST

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சென்னையில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கப்பட உள்ளது.

PREV
14
Ration Delivery For Senior Citizen

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியவில்லை. இதை கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

24
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

34
சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

இந்நிலையில், சென்னையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று. செப்டம்பர் 2025 திங்களுக்கு 13.09.2025 முதல் 16.09.2025 முடிய பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியினை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தினை மேற்குறிப்பிட்ட பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

44
எந்தெந்த இடங்கள்? எந்தெந்த பகுதிகள்?

வ.எண் செப்டம்பர் 2025 திங்களில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்கள் சென்னை பெருநகராட்சி மண்டலம்: 13.09.2025, 14.09.2025 மற்றும் 15.09.2025 (மூன்று நாட்கள்) மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர். 13.09.2025, 14.09.2025, 15.09.2025 மற்றும் 16.09.2025 (நான்கு நாட்கள்) திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர். அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர்.

Read more Photos on
click me!

Recommended Stories