அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், முன் ஜாமீன் கேட்ட பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜெகன் மூர்த்தி தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரத்தில் நான்கு தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.