10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
இத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி வருகின்றனர். இதற்காக 4,113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 296 தேர்வு மையங்களில் 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரம் மாதம் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கு தேர்வு அறை கண்காணிப்பாளராக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 10ஆம் வகுப்பு தேர்விற்கு 4,113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ஆசியர்கள் பணியில் அமர்த்த வேண்டிய நிலை உள்ளது.