Sabarimala Devotees Insurance Scheme : கேரளாவில் உள்ள சபரிமலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் பல வித சிறப்பு வசதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் அவர்களது குடும்பத்தினருக்கு 5லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.