தொடங்கியது முன்பதிவு
சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்ற வகையில் 3 நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு- ஒகேனக்கல், குற்றாலம், மைசூர் பெங்களூர் மற்றும் மூனார் சுற்றுலாக்கள் போன்ற கோடைக்கால சுற்றுலா பயணத்திட்டங்கள்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டு,
சுற்றுலா பயணிகளால் முன்பதிவுகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இக்கோடைக்கால சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.