Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!

Published : May 24, 2026, 08:30 AM IST

Power Shutdown Areas: தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (25-05-2026) திங்கள் கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

PREV
16
மாதாந்திர பராமரிப்பு பணி

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி வருகின்றனர். கடும் புழுக்கம் காரணமாக எந்நேரமும் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின்தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது மற்றும் மின்வயர் செல்லும் பாதைகளில் மரக்கிளைகள் வெட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

26
நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையான நாளை (25-05-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.

36
கோவை

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

46
ஈரோடு

சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

56
சேலம்

கே.எம்.நகர், பி.டி.எம்.நகர், முட்டைக்கடை, இபி காலனி,, மசிநாயக்கன்பட்டி, வி.எம்.கே.நகர், வி.ஐ.பி.சிட்டி, மேட்டுப்பட்டி, ஜே.ஜே.காலனி, நெசவலர் காலனி, மகேந்திரபுரி, கோரிமேடு, எட்டு கலைக் கல்லூரி, கன்னங்குறிச்சி, மொட்டங்குறிச்சி,, சின்னமுனியப்பன் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பவர் கட் செய்யப்படும்.

66
உடுமலைப்பேட்டை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசாமு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories