இப்படியாக டாஸ்மாக் குறித்து தீமைகள் அடுக்கிக் கொண்டே போனாலும் திராவிட கட்சிகள் பெயரளவுக்கு டாஸ்மாக் கடைகளை குறைத்ததே தவிர, இதனை முழுமையாக மூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் விஜய்யின் தவெக அரசு பேருந்து நிலையங்கள், கோயில்கள், கல்வி நிலையங்களில் அருகில் உள்ள சுமார் 717 டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிட்டது மக்களிடம் வரவேற்பை பெற்றது.
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு
டாஸ்மாக்கில் மதுவுக்கு கூடுதல் பணம் வாங்குவது காலம் காலமாக நடந்து வரும் நிலையில், மதுவுக்கு கூடுதல் பணம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்கப்படும் என தவெக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கல்வி நிலையங்கள். வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.