Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?

Published : May 17, 2026, 03:22 PM IST

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை.

PREV
14
சுட்டெரிக்கும் கோடை வெயில்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டில் ஃபேன் மற்றும் ஏசி உள்ளிட்ட பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

24
மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை

மின் தடை செய்யப்படும் நேரத்தில் மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது, சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் (18-05-2026) தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

34
சேலம்

ஒண்டிக்காடு, நாகளூர், முலுவி, கொளஹூர், காவிரி சிகரம், செம்மானந்தம், பட்டிபாடி, பூமரத்தூர், எடகனசாலை, பூக்கார வட்டம், மடத்தூர், காந்தி நகர், காடம்யம்பட்டி, ஆதனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

44
உடுமலைப்பேட்டை

ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, நீர்வீழ்ச்சிகள், குரங்குமுடி, தலை முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், மூடிஸ், சின்கோனா, பன்னிமடு, மணப்பள்ளி, கடம்பரை சுற்றியுள் அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories