பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழக மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 6 முதல் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியூர்களுக்கு ரயில், பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு நாளை இரவு முதல் சென்னை திரும்பவுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.