ஈரோடு கிழக்கு - எம்எல்ஏக்கள் மரணம்
2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, தொகுதி பணிகளிலும் சட்டப்பேரவை நிகழ்விகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருமகன் ஈவேரா மரணத்தால் காலியான தொகுதியில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.