நிதியை கொட்டிக்கொடுக்கும் டாஸ்மாக்
நாளொன்றுக்கு 100 முதல் 125 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினத்தில் 200 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் தமிழக அரசின் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திட டாஸ்மாக்கின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த அளவிற்கு டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறை நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷச பாத்திரமாக உள்ளது. மேலும் மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாலம் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை.