இதே போல முதலமைச்சர் வீடு, எதிர்கட்சி தலைவர் வீடு, ஆளுநர் மாளிகை, ரயில் நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என அவ்வப்போது மர்ம தகவலால் அச்சமான நிலை நீடிக்கும்.
உடனடியாக போலீசாரும் மோப்ப நாய் உதவியோடு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொள்வார்கள். அதன்பிறகு அது புரளி என தெரியவரும். இதே போல ஒரு சம்பவம் இன்று காலையிலேயே பொதுமக்களை அச்சம் அடைய செய்துள்ளது. அந்த வகையில் பிரபல நடிகை நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.