தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடு, மனை மற்றும் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, அரசு விதிகளின்படி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முழு தொகை செலுத்திய பின், தேவையான ஆவணங்களுடன் (அடையாளச் சான்று, முகவரி சான்று, கடன் ஆட்சேபனையில்லா சான்று) விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.
இந்த நிலையில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள், வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உரிய முறையில் செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் தாமாக முழுமையாக செலுத்தாத பயனாளிகளுக்கு மாதத்தவணைக்கான அபராத வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக அபராத வட்டி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை உள்ளது.