அயல்நாட்டில் உறுப்பினர் உயிரிழந்த ஒன்பது மாத காலத்திற்குள் குடும்பத்தினர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நேரடியாகவோ அல்லது இவ்வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியின் அடிப்படையில் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட
ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும்.
குடும்பத்தினரின் சான்றுகளின் அடிப்படையில், குடும்பத்தினர் வறிய நிலையில் இருக்கின்றார்களா என்பதற்கான அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் பெறப்படும்.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பிற்கு பின். தெரிவு செய்யப்படும் குடும்பத்தினருக்கு (வாரிசுதாரருக்கு) ரூபாய் ஒரு லட்சம் வழங்க நிதி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விவரம் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிக்கையாக பெறப்படும்.