மாணவர்களுக்கு பரிசு தொகை
மேலும், பள்ளிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நாடகம், கவிதை, கட்டுரை, கதைப்போட்டி மற்றும் வினாடி-வினா போன்ற போட்டிகளை நடத்திட வேண்டும். இதன் காரணமாக மாணவர்களிடையே திருக்குறளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 திருக்குறளை மனப்பாடம் செய்த மாணவர்களுக்கு 200 ரூபாய் பரிசுத்தொகையை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்றுவதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.