மானிய விலையில் உணவு பொருட்கள்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மானிய விலையில் மானிய விலையில் அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதனை 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சரிவர பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டு ரேஷன் கடையில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படுகிறது.