தமிழகத்தில் அடுத்த அண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்துவதிலும், சிறிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் அதிக தொகுதிளைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது. அதே போன்று அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா டுடே - சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை நிலவினாலும் அதிமுக, பாஜக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்து.