கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு பயணிகளை எற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இரண்டு கார்கள், ஒரு லாரி மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து ஆம்னி பேருந்து மோதியது.