நவம்பர் மாதம் கொண்டாட்டம்
அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையும் பள்ளி வேலை நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த கல்வியாண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் துவக்கமே மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கூறப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.