செங்கோட்டையன் மட்டுமல்ல SP வேலுமணியை காலி செய்து! EPSஐ முடித்து கட்ட ஸ்கெட்ச்! சாதி வெறி பிடித்த நரி யார் தெரியுமா?

Published : Sep 08, 2025, 08:43 AM IST

அதிமுகவில் ஒரு சாதி வெறி பிடித்த நரி கட்சியின் ஒற்றுமையை சிதைத்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமியை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு கட்சியை வலுவிழக்கச் செய்து வருவதாகவும் கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

PREV
14
செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி உசுப்பேற்றி செங்கோட்டையன் போன்றவர்களை வீழ்த்தி இந்த இயக்கத்தின் ஒற்றுமையை தடுத்து வலிமையை சிதைத்து கொண்டு இருக்கிறது அந்த நரி என கே.சி.பழனிசாமி அதிமுக மூத்த தலைவர் ஒருவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அதிமுகவில் ஒரு சாதி வெறி பிடித்த நரி அம்மா காலத்தில் "சாதி வெறியன்" என்று முத்திரை குத்தப்பட்டு அமைச்சரவை மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. அந்த நரி அம்மா இருக்கிற வரை அட்ரஸ் இல்லாமல் இருந்தது, அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு OPSஐ முதலமைச்சராக்குகிறேன், கட்சித் தலைவர் ஆக்குகிறேன் என்றெல்லாம் சொல்லி சதி திட்டம் தீட்டி OPSஐ முன்னிறுத்தி முதல் பிளவை உருவாக்கியது, அதில் தன்னை இரண்டாம் இடத்திற்கு உயர்த்திக் கொண்டது.

24
ஓபிஎஸ் இபிஎஸ்

அதன்பின் அந்த நரி முக்குலத்து சமுதாயத்தை பழிவாங்க முனைப்போடு செயல்பட்டது, இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என்று எல்லா தொண்டர்களும் விரும்பிய பொழுதும் நான் அதற்கு முயற்சி எடுத்த பொழுதும் அந்த நரி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது, ஒரு நாள் அந்த நரியை தோலுரித்த பின்னர் சில காலம் முடங்கியது. பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைகிற பொழுது முட்டுச்சந்தில் இருந்து தனது சித்து விளையாட்டுக்கள் மூலம் பல சீனியர்களை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முன்னேறியது.

34
S.P.வேலுமணி

இந்த இயக்கம் வலுவோடு விளங்க வேண்டும் என்று நினைத்த பலரையும் தன் சதி திட்டத்தால் பின்னுக்கு தள்ளியது என் போன்றவரை கட்சியிலிருந்து நீக்க வைத்தது, தற்பொழுதும் எடப்பாடி பழனிசாமியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போலவும் ஜெயலலிதா அம்மா போலவும் ஆக்கி விடுவேன் என்று ஈபிஎஸ்-ஐ உசுப்பேற்றி செங்கோட்டையன் போன்றவர்களை வீழ்த்தி இந்த இயக்கத்தின் ஒற்றுமையை தடுத்து வலிமையை சிதைத்து கொண்டு இருக்கிறது. C.V சண்முகம், S.P.வேலுமணி போன்றோரையும் காவு வாங்க காத்துக் கொண்டிருக்கிறது, அதற்கேற்ற சதிவலைகளையும் தீட்டிக் கொண்டிருக்கிறது. அதிகார போதை ஊட்டி ஊட்டி எடப்பாடியை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு இந்த இயக்கத்தை என்றுமே வெற்றி பெற முடியாத நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது.

44
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி இனம் கண்டு இந்த நரியை தோலுரிக்காவிட்டால் 2026 மட்டும் அல்ல எந்த காலத்திலும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை ஏற்படும், இவர் காலத்தில் இந்த இயக்கம் வலுவிழந்தது என்ற தீராத பளிச்சொல்லுக்கு எடப்பாடி ஆளாக நேரிடும். மேலும் எடப்பாடியையும் அமித்ஷாவையும் மோதவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் முடித்துக்கட்ட முனைப்போடு இருக்கிறது அந்த நரி, விஜய் எனும் மாய மானை முன்னிறுத்தி அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க முடிவு செய்துள்ளது அந்த நரி என தெரிவித்துள்ளார். கே.சி.பழனிசாமி மறைமுகமாக யாரை இவ்வளவு கடுமையாக சாடுகிறார் என்று பார்த்தால் நெட்டிசன்கள் அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி என்று பதிவிட்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories