அந்த வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த விஜய்யின் தவெகவில் அரசியல் அனுபவமுள்ள தலைவர்கள் யாரும் இல்லை, விஜய்யின் ரசிகர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த புஸ்ஸி ஆனந்த் தான் தவெகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரும் புதுச்சேரியில் எம்எல்சியாக இருந்தவர்.
மற்ற அடுத்தக்கட்ட தலைவர்களாக ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல் குமார் உள்ளனர். எனவே விஜய்யை சந்திக்க வேண்டும் என்றால் புஸ்ஸியை சந்தித்தால் மட்டுமே முடியும். அந்த அளவிற்கு நெருக்கமாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் நேரடியாகவே புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார்.